மகளிர் உரிமைத் தொகை: மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு…ஜன.10ல் வரவு!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்த 2 லட்சம் பேருக்கு ஜன.10ல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் குறிப்பிட்ட மிக முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 1.63 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
1.63 கோடி பேரில் இருந்து 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலைஞர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15 , மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவங்கி வைத்தார். இந்த உரிமைத்தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்து அறிவிப்பாணை வெளியிட்டது. அதன்படி, லட்சக்கணக்கான மகளிர் மேல்முறையீடு செய்தனர். முன்னதாக நவம்பர் மாதம் இந்த மேல்முறையீடு செய்தவர்களில் இருந்து 7.35 லட்சம் மகளிர், உரிமை தொகை திட்டத்தில் சேர தகுதியானவர்கள் என சேர்க்கப்பட்டனர். மேலும், இந்த திட்டத்திற்காக மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்.. புதிய பயனாளிகள் சேர்ப்பு! தகுதியற்றவர்கள் நீக்கம்!
தற்பொழுது, 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். 1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இம்மாதம் முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் – கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு!
இன்றைய தினம் அனைத்து நியாய விலை கடைகளில் அரிசி பெரும் குடும்ப அட்டைதார்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் வழங்கபடும் என அறிவித்ததோடு, மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் இந்த மாதம் முன்னதாக 10ம் தேதி தகுதி பெற்ற மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கும் வரும் 10ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.