மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Default Image

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர் தொடர்ந்த வழக்கில் வெளியுறவு அமைச்சகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, மீனவர்கள் கைது தொடர்பாக அனுதாபம் மட்டும் தான் தெரிவிக்க முடியும்.

இதனால் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக 68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நிய நாட்டை நீதிமன்ற உத்தரவால் நிர்வகிக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.  மேலும், முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கும் ஆணையிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
China chips
KKR VS LSG IPL 2025
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin