முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை.. லஞ்ச ஒழிப்புத்துறை!

kamaraj

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார்.

பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடு செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை கூறியதாவது, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. டெண்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டும் என நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவித்திருந்தது.

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பதிலடி!

இதன்பின், ரூ.350 கோடி முறைகேடு புகார் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத்துறை உத்தரவிட்டு, காமராஜ் மீதான புகார் குறித்த விசாரணை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2015-2021 டெண்டரில் பங்கேற்ற அதிகாரிகளின் விவரங்கள் உள்ளிட்டவை கேட்டுள்ளோம் என்றும் டெண்டர்களில் பங்கேற்று வெற்றி பெற்ற நிறுவனங்களின் தகவல்களை அளிக்குமாறு பிற துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் எனவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்