கன்றுக்கு தாயாய் மாறிய வளர்ப்பு நாய்! மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

dog and cow

குன்றத்தூர் :  சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இயற்கை எவ்வளவு அழகானது என்பதை காண்பிக்கும் விதமாக சிறுகளத்தூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டின் உரிமையாளர்கள்  மாடுகள், நாய்கள் வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாடு ‘மடி நோய்’ ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த அந்த மாட்டுடைய கன்றுக்குட்டி தாயை இழந்து வாடி பால் குடிக்காமல் இருந்துள்ளது. இந்த சூழலில், வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் கன்றுக்குட்டிக்கு தாயாக மாறி பால் கொடுத்தது. பால் கொடுத்த பிறகு, அந்த நாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கன்றுக்குட்டி நாயின் காதுகளை பாசமாக கடித்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்தியது.

பால் கொடுத்த அந்த நாயும், தன்னுடைய வாலை செல்லமாக அசைத்துக்கொண்டு கன்றுக்குட்டியுடன் நின்றது.  இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை வீட்டின் உரிமையாளர் தனது போனில் வீடியோவும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும், “விலங்குகள் கிட்ட இருந்து மனிதன் பாடம் கற்று கொள்ள வேண்டும்” எனவும், இயற்கை எவ்வளவு அழகானது, இந்த வீடியோவை பாருங்கள் தெரியும்” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்