தமிழகத்தில் மட்டும் 13.90 கோடி: தேர்தல் ஆணையம் அதிரடி!!

Default Image
  • நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.இதில் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
  • அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

‘நாடாளுமன்ற தேர்தலுக்காக இதுவரை 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 2 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு மட்டும் தலா 3 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் தேர்தல் பறக்கும் படையால் இதுவரை 13.90 கோடி ரூபாய்  பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உரிமம் பெற்றுள்ள 2,999 துப்பாக்கிகளில் 18,000 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.மேலும்  32 துப்பாக்கிகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்