தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!தினகரன் அணி அதிரடி

Default Image

தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் வரும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.
 
Image result for தினகரன்

இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி)  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு  செய்யப்பட்டுள்ளது.சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றம் செல்கிறோம். மேலும் இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.அமமுக சார்பில் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் இன்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூறுகையில், தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் வரும் 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று  தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்