சென்னையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முழு பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், அங்கு மேலும் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என முதல்வர் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 19 தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
அங்கு முழு ஊரடங்கு, நாளை இரவு முடிவடையவுள்ள நிலையில், சென்னையில் மட்டும் ஜூலை-6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.
unknown nodeunknown node