நிலோபர் கஃபில் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என முதல்வர் ட்வீட்.
உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பல லட்சக்கணக்கானோரை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், உயிர் இழக்கவும் செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அதிக அளவில் சென்னை மாநகராட்சியில் தான் கொரோனாவின் தாக்கம் உள்ளது. ஏற்கனவே பல அரசியல் கட்சி தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பலருக்கு சிகிச்சை நடை பெற்றும் வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கஃபில் அவர்களுக்கும் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவரது உடல் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node