தனது நண்பர் ட்ரம்பை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி? ப.சிதம்பரம் ட்வீட்!

Default Image

அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இருவரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையில், இருவருக்கும் இடையில் நேருக்கு நேர் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இந்தியா குறித்து பேசப்பட்டது.

இந்த விவாதத்தின் போது பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில், 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க அமெரிக்க அரசு தவறிவிட்டது. அமெரிக்கர் இதுவரை சந்திக்காத மோசமான அதிபர் டொனால்டு ட்ரம்ப் என குற்றசாட்டியுள்ளார்.

இதற்க்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த துல்லியமான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றும், புவி வெப்பமயமாதலுக்கு இந்தியா, சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய அரசியலில் இந்த விவாதம் கவனம் பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், கொரோனாவால் உயிரிழந்தோர் விவரத்தை இந்தியா மறைப்பதாகவும், அதிக காற்று மாசு ஏற்படுத்துவதாகவும் இந்தியாவின் மீது ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். தனது நண்பர் ட்ரம்பை கவுரவிக்க இன்னொரு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி?’ என ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்