பள்ளத்தில் வாகனம் கவிந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு; 8 பேர் காயம்!

Default Image

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி மாவட்டத்தை சேர்ந்த சாகிசைன் எனும் ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஒரு வட்ட அதிகாரி பிரேம் லால் தம்தா கூறுகையில், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவருக்கு பலத்த காயம்  கூறியுள்ளார்.

மேலும், பலத்த காயமடைந்த இருவரும் மற்ற ஒரு சுகாதார நிலையத்திற்கு தற்போது அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் அங்கித் குமார், ஹயாத் சிங், மெஹர்பன் சிங், தப்டே, அம்பிகா மற்றும் குமாரி மோனிகா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்