உ.பி. முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை அறிவிப்பு

Default Image

முலாயம் சிங் யாதவின் உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ்-வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்னும் ஐசியூவில் இருக்கும் முலாயம் சிங் யாதவ்வுக்கு உயிர் காக்கும் கருவிகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை கூறியுள்ளது.

வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம், குருகிராம் மருத்துவமானையில் முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அருகே மேதாந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அக்.2-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்னும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்