"எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை!"- நடிகர் மகேஷ் பாபு

எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை என தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

16 மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.பி.பி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.

அவரின் மறைவிற்கு உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், அவரின் மறைவிற்கு தெலுங்கு சினிமா நடிகரான மகேஷ் பாபு, தனது இரங்கலை தெரிவித்தார்.

அவரின் ட்விட்டரில், “பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைந்த செய்தி உண்மை என்று என்னால் ஏற்க முடியவில்லை. அவரின் ஆத்மார்த்தமான குரல், ஈடு இணையற்ற ஒன்று. அவரின் ஆத்மா சாந்தியடையும். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.