சிக்கிமில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி!

Default Image

வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 16 ராணுவ வீரர்களுக்கு இன்று அஞ்சலி.

வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமா என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நேற்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்றும் மேலும் 4 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிக்கிமில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று பக்தோக்ராவில் நடைபெறுகிறது.

இன்று மதியம் 12:30 மணி முதல் 2 மணி வரை பாக்டோக்ரா விமான நிலைய தொழில்நுட்ப பகுதியில் விபத்தில் இறந்த 16 ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்