இலவச தரிசனம் ரத்து.! – திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அதிரடி.!

Default Image

செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில நாட்களில் அங்குள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மீண்டும் திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது கோவில் நிர்வாகம் புதிய  செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. –

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்