சிங்கத்தின் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்..!

Default Image

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் வழக்கம் போல நேற்றும் பொதுமக்கள் அங்கு உள்ள விலங்குகளை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். சிங்கம் இருக்கும் பகுதியில் பாதுகாப்பு சுவர் மற்றும் இரும்பு வேலிகள் அமைந்துள்ளது.
இந்நிலையில்  இதை அனைத்தையும் தாண்டி ஒரு இளைஞர் சிங்கம் இருக்கும் பகுதியில் உள்ளே நுழைந்தார்.அந்த இளைஞர் சிங்கம் அருகில் செல்வதை பார்த்த பொதுமக்கள் எல்லாம் அலறினர்.
இது எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படாத அந்த இளைஞர் சிங்கத்தின் அருகே அமர்ந்து முகத்தை நேருக்கு நேர் பார்த்து இளைஞர் பேசிக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் சிங்கம் அமைதியாக இருந்தது. அப்போது அந்த இளைஞர் சிங்கத்தின் முகத்தை தடவிக் கொடுத்து பிறகு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
திடீரென சிங்கம் அந்தக் இளைஞரை தாக்க முயற்சி செய்தது அப்போது  பூங்கா ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி இளைஞரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் விசாரணையில் அந்த இளைஞர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் , அவர் பெயர் ரேஹன் எனவும் , அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்