முன்னாள் காதலியின் கையை பிடித்து இழுத்த நபர்…! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

Default Image

கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியின் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக, அந்த நபருக்கு ஒரு ஆண்டு சிறை தணடனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்திற்காகவும், பொது இடத்தில் அவரது கையை பிடித்து இழுத்து அவளது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபருக்கு ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து நீதிபதி, காதல் விவகாரமாக இருந்தாலும் அந்த நபர் அவ்வாறு நடந்து கொள்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலிருந்து கூறுகையில் பெரிய தவறு செய்ததாக நீதிமன்றம் கூறியிருந்தாலும் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் கால அவகாசத்தை கருத்தில் கொண்டு கடுமையான தண்டனை வழங்குவது நியாயமில்லை என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்