ஊர்மக்கள் முன்னிலையல் சிறுமியின் தலைமுடியை வெட்டிய நபர்.! கைது செய்த போலீசார்.! நடந்தது என்ன.?

Default Image

மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் நண்பருடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது பெற்றோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் யாரும் ஏதும் கண்டுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், சிறுமியை தாக்கிய அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்