குக்கர் குண்டு வெடிப்புக்கு ‘நாங்கள்’ பொறுப்பு.! வெளியான பகீர் கடிதம்.! போலீசார் விளக்கம்.!

Default Image

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும் மர்ம கடிதம் ஒன்று காவல்துறை வசம் சிக்கியுள்ளது. 

கர்நாடக மாநிலம், மங்களூருவில் சில தினங்களுக்கு முன்னர் ஆட்டோவில் குக்கர் குண்டு ஒன்று வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுனரும், உடன் பயணித்தவரும் காயமடைந்தனர். இதில் காயமடைந்த முகமது ஷாரிக் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முகமது ஷாரிக் பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதில் அவர் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களுக்கு வந்தது தெரியவந்துள்ளது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த குக்கர் குண்டு வெடிப்புக்கு ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்பதாகவும், கர்நாடகாவில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை தகர்க்க திட்டமிட்டதாகவும், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கடிதம் பற்றி கர்நாடக காவல்துறை சார்பில் கூறுகையில், இப்படி ஒரு அமைப்பை இதுவரை நாங்கள் கேள்வி பட்டதில்லை. இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருகிறோம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்