விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டது..!

Default Image

இன்று காலை 09 .28 மணிக்கு ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்  விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தமாக  14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு சொந்தமான 3 கார்டோசாட்  செயற்கைக்கோள்கள் மீதம் உள்ள  13 நானோ செயற்கைக்கோள் அமெரிக்காவுக்கு சொந்தமானது. கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டது.
மேலும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் அந்தந்த சுற்று வட்டப்பாதையில் இன்னும் சற்று நேரத்தில் நிலை நிறுத்தப்படும். கார்டோசாட் செயற்கைக்கோள்கள் புவியை கண்காணிப்பதுடன் , புகைப்படத்தையும் அனுப்ப உள்ளது. இரவு நேரத்திலும் புவியின் புகைப்படத்தை தெளிவாகஅனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடு 5 ஆண்டுகள் இருக்கும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்