கான்ஸ்டபிள் முகத்தில் வெந்நீரை ஊற்றிய உயர்அதிகாரி.!

Default Image
  • சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.
  •  திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார்.

பீகார் மாநிலம்  ராஜ்கிர் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையம் உள்ளது.அந்த மையத்தின் துணை ஆய்வாளர் டி.கே.திரிபாதி. இவர் நேற்று பணியில் இருந்தபோது கான்ஸ்டபிள் அமோல் காரத்திடம் வெந்நீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து உயர் அதிகாரி கூறியதால் அமோல் வெந்நீர் கொண்டு வந்து உள்ளார்.அவர் கொண்டு வந்த வெந்நீர்  சூடாக இருந்ததால் குடித்து விட்டு திரிபாதி கோபத்தில் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

கோபமடைந்த திரிபாதி , கான்ஸ்டபிள் அமோல் முகத்தில் சூடாக இருந்த வெந்நீரை ஊற்றி உள்ளார். இதனால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்பட்ட  படுகாயம் காரணமாக அமோல் வலியால் துடித்து உள்ளார்.

பின்னர் அமோலை உடனடியாக மருத்துவமைக்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.மேலும் வருகின்ற 10 ம் தேதி சம்பவம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனஅதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்