ஜம்மு-காஷ்மீரில் மோதல்.., தீவிரவாதி சுட்டுக்கொலை, 3 ராணுவ வீரர்கள் காயம்.!

குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

Kulgam Encounter

ஜம்மு-காஷ்மீர் :இஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.  இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒரு இந்திய ராணுவ ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (JCO) காயமடைந்துள்ளார்.

குல்காம் மாவட்டத்தின் குட்டார் காட்டுப் பகுதியில், ஜம்மு-காஷ்மீர் போலீஸின் உளவு தகவல்களின் அடிப்படையில் இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.தீவிரவாதிகளின் இருப்பை உணர்ந்ததும், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சண்டை தொடங்கியது.

ஒரு தீவிரவாதி (நசீர் அகமது என்று அடையாளம் காணப்பட்டவர், ஷோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்) சுட்டுக்கொல்லப்பட்டார். சில அறிக்கைகளின்படி, இவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதி என்று கூறப்படுகிறது.

மேலும், ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி கடுமையான காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன.