அதிர்ச்சி வீடியோ...கால்பந்து போட்டியின் போது நடந்த சம்பவம் – 200 பேர் காயம்!

கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி

கேரளா மாநிலம்,மலப்புரத்தின் பூங்கோட்டில் நேற்று இரவு கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்த போட்டியின் போது பார்வையாளர்கள் அமர தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேலரி சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து,காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும்,அவர்கள் யாரும் சீரியஸாக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,இந்த சம்பவம் தொடர்பாக,உள்ளூர் காவல்துறையினர் கூறுகையில்:”இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையிலான செவன்ஸ் இறுதிப் போட்டி நேற்று இரவு 9 மணியளவில் நடைபெற்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளதுமேலும்,இந்த விபத்தில் 5 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும்,சுமார் 200 பேர் காயம் அடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.