ஜாக்கெட்டிற்கு ஜன்னல் வைக்கும் இடத்தில் சமூக அக்கறை காட்டும் வடஇந்திய பெண்கள்! நவராத்திரி கொண்டாட்டம்!

Default Image

இந்தியா முழுவதும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த நவராத்திரி விழா அதிக கொண்டாட்டத்துடன் இருக்கும். தென்மாநிலங்களில் அநேக இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

இந்த நவராத்திரி விழாவிற்க்காக தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் உள்ள பெண்கள் வித்தியாசமான முறையில் தயாராகி வருகின்றனர். அதாவது, அவர்கள் தங்கள் முதுகில் பல்வேறுவிதமான சமூக அக்கறை கொண்ட டாட்டூக்களை வரைந்து வருகின்றனர்.

இந்த டாட்டூக்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டமான சந்திராயன்-2, போக்குவரத்து விழிப்புணர்வு ஓவியங்கள், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370 என பல சமூக அக்கறை கொண்ட ஓவியங்களை தங்கள் முதுகில் வரைந்து வருகின்றனர்.

இந்த டாட்டூ வரைந்த வட இந்திய பெண்களின் முதுகுகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இனி யாரும் ஜன்னல் வைத்த ஜாக்கெட் என்று கிண்டல் செய்ய முடியாது. அதிலும் சமூக அக்கறையை காட்டும் வகையில் இந்தப் பெண்கள் செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen