சுஷாந்த் சிங் தலைமையில் விளையாட்டு அறக்கட்டளை.! குடும்பத்தாரின் நெகிழ்ச்சி செயல்.!

Default Image

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்தினர் ஒரு விளையாட்டு அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க உள்ளனராம்.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாலிவுட் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவரது மறைவு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

தற்போது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்தினர் ஒரு விளையாட்டு அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க உள்ளனராம். மேலும், பாட்னாவில் சுஷாந்த் சிங் வாழ்ந்த அவரது வீட்டை அவரது நினைவிடமாக மாற்ற உள்ளனராம். இந்த தகவலை சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்