தற்கொலை படை தாக்குதல்; இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்..2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

Default Image

ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்