இலங்கை பிரதமர் இன்று இந்தியா வருகை.! எதற்கு என்று தெரியுமா.?

Default Image
  • இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
  • இதனிடையே ராஜபக்சேயின் சகோதரர், அதிபராக பதவியேற்ற பிறகு கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா வந்தார் என குறிப்பிடப்படுகிறது.

இலங்கை பிரதமர் ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதன்முறையாக 5 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜபக்சே ஐந்து நாள் பயணத்தில் பாதுகாப்பு, வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற விஷயங்கள் குறித்து, அவர் பேச்சு நடத்த உள்ளார். இந்நிலையில், அரசுமுறை பயணமாக இன்று ராஜபக்சே இந்தியா வருகை தந்து, டெல்லியில் அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின் அவர் வாரணாசி, சாரநாத், புத்த கயா, திருப்பதிக்கு செல்கிறார். அடுத்த மாதம் 11-ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருக்கிறார் என்று தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே இலங்கையில் கடந்த நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ராஜபக்சேயின் சகோதரர், கோத்தபயா ராஜபக்சே வெற்றி பெற்றார். அதேபோல் முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து அதிபராக பதவியேற்ற பிறகு கோத்தபயா, தன் முதல் வெளிநாட்டு பயணமாக, கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்