தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை அத்து மீறி நுழைந்த தமிழக மீனவர்களின் பல கோடி மதிப்பிலான விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்தனர் . அதில் 94 இந்திய படகுகளை ஊர் நீதிமன்றமும் ,37 படகுகளை மன்னார் நீதிமன்றமும் காவலில் வைக்க உத்தரவிட்டனர் . அதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிறைப்பிடித்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது . அதில் சேதராமில்லாமல் இருந்த 10 படகுகளை மட்டுமே இந்திய மீனவர்கள் கொண்டு சென்றனர் . மற்ற படகுகள் அனைத்தும் பழுதடைந்து சேதாரமுடன் காணப்பட்டது

அதில் மீதமுள்ள 121 விசைப்படகுகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் கடலில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது . இந்த புகாருக்கான வழக்கு விசாரணைக்கு வந்த போது இலங்கை கடற்படையினரின் காவலில் உள்ள 121 படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .  இது தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனுடன் அவர்கள் அழிக்கும் படகுகளுக்கான நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்