பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள்.!

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்ட்டுள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்ட்டுள்ளது.

கொரோனா சூழல் காரணமாக பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அவ்வாறு வாழ்வாதாரம் பாதிக்கப்படவர்களின் பாலியல் தொழிலாளர்களும் அடங்கும். கொரோனா காரணமாக உடல் ரீதியான தொடர்பை தவிர்க்க வேண்டும் என்பதால் அவர்கள் வருமானமின்றி ஒரு வேளை சாப்பிட்டிற்கே பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல் தொழிலாளர்களுக்கு மாநில அரசின் சிவில் விநியோகத்துறையின் உதவியுடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், பாலியல் தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் இருந்து தேவையான பொருட்களை பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.