கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் – கபில் சிபல்.!

Default Image

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த, தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது.

பின்னர், மேலிடம் அசோக் கெலாட்டை முதலமைச்சராகவும், சச்சின் பைலட்டுக்கு துணை முதலமைச்சராகவும்  நியமித்தது. இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து அதிருப்தி நிலவி வருகிறது. தற்போது, சச்சின் பைலடன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேருடன் டெல்லியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கபில் சிபல் தனது டுவிட்டில் பதிவு ஒன்றை வெளிட்டு உள்ளார். அதில்,  நமது கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பிறகு தான் நாம் கவலைப்படுவோமா..? என  பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu