மாமியாரின் மூக்கை கடித்த மருமகன்..!காதை வெட்டிய சம்பந்தி..!

Default Image

உத்தரப்பிரதேசத்தின் நகட்டியா பகுதியை சார்ந்த கந்த ரஹ்மான் என்பவரின் மகள் சாந்திபி. இவர் முகமது அஷ்பாக் என்பவரை கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார்.அப்போது ரகுமான் தன் மகளின் திருமணத்திற்கு 10 லட்சம் வரதட்சணையாக கொடுத்துள்ளார்.

இதையடுத்து திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் மீண்டும் 5 லட்சம் தனது அப்பாவிடம் இருந்து வாங்கி வருமாறு முகமது அஷ்பாக் தன் மனைவியை கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு ரகுமான் மறுக்க ஆத்திரமடைந்த முகமது அஷ்பாக் தன் மனைவியை துன்புறுத்தியுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு ரகுமான் அவரது மனைவி குல்ஷானுடன் வந்தனர்.  இரு வீட்டினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தின. அப்போது பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாற கோபமடைந்த முகமது அஷ்பாக் தன் மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்து உள்ளார்.

அதே நேரத்தில் முகமது அஷ்பாக்  தந்தை குல்ஷானின் காதை கத்தியால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் குல்ஷான் மயங்கி விழுந்து உள்ளார்.பின்னர் முகமது அஷ்பாக் அவரது தந்தை இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.புகார் அடிப்படையில் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.காயம் அடைந்த குல்ஷான் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head
Actress Vijayalakshmi