அதிர்ச்சி : மைக்ரோவேவ் ஓவனுக்குள் இறந்த நிலையில் இரண்டு மாத பெண்குழந்தை..!

Default Image

தெற்கு டெல்லியில் டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அடுப்பிற்ற்குள் 2 மாத குழந்தை 

தெற்கு டெல்லியில் நேற்று மதியம் மைக்ரோவேவ் ஓவணுக்குள்  இரண்டு மாத பெண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாலை இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துணியில் சுற்றப்பட்டு இருந்த சிசுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் தாயே குழந்தையை கொன்று இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகித்ததையடுத்து அவரது தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

குழந்தையை காணவில்லை

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், குழந்தையை காணவில்லை என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. மாளவியா நகர் காவல் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அக்கம்பக்கத்தினர், குழந்தை மைக்ரோவேவ் அடுப்பில் இருப்பதை கண்டதாக எங்களுக்கு தெரிவித்தனர். ஆனால் குழந்தை எவ்வாறு இறந்தது என்பதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவத்தில் உண்மைத்தன்மை கண்டறிய அவரது தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

வீட்டை பூட்டிய குழந்தையின் தாய் 

மேலும் இதுகுறித்து குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில் குழந்தையின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் சம்பவத்தின்போது வீட்டிற்கு அருகிலிருக்கும் பல்பொருள் அங்காடியில் இருந்துள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் குழந்தையின் தாய் அவரது மூத்த குழந்தையான  4 வயது சிறுவனை அடித்ததாக கேள்விப்பட்டதாக  குற்றம்சாட்டினர்.

அவர்கள் அதை தடுக்க மாடிக்கு விரைந்த போது தன்னையும் தனது மகனையும் அறையில் பூட்டி கொண்டுள்ளார். பின்னர் நாங்கள் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, அவள் மயக்கமடைந்த நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இதற்கிடையில் குழந்தையை காணவில்லை என்பதை அறிந்து அவரிடம் கேட்டபோது குழந்தை குறித்து அவர் பேச மறுத்து விட்டாள் என தெரிவித்தனர்.

கொன்றது குழந்தையின் அம்மா தான் 

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குழந்தையின் தாத்தா நான் கீழே தூங்கிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டது. குழந்தையை காணவில்லை என்று கூறினேன். நாங்கள் அனைவரும் அருகில் உள்ள வீடுகள் மற்றும் சாலைகளில் தேடினோம். தொட்டிகள் மற்றும் வீட்டில் உள்ள அறைகளுக்கு சென்று பார்த்தோம். சிறிது நேரம் கழித்து சில சிறுவர்கள் மொட்டை மாடிக்கு சென்று அங்குள்ள ஒரு அறையை திறந்தனர். அங்கு குழந்தையின் உடல் மைக்ரோவேவ் அடுப்பிற்குள்  பதுக்கி வைத்திருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். வீட்டில் குழந்தையின் தாய் மட்டும் தான் இருந்ததால் குழந்தையின் அம்மா தான் அவளை கொன்று இருப்பாள்  என்று நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்