சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Default Image

சிவசேனா தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பண மோசடி வழக்கில் சிவசேனா தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு மீது மும்பை பிஎம்எல்ஏ சிர்பூ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பத்ரா சால் நில மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மும்பையின் பிஎம்எல்ஏ நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ED மேல்முறையீடு செய்யும் வகையில், ஜாமீன் உத்தரவை குறுகிய காலத்திற்கு செயல்படுத்த தடை கோரியுள்ள நிலையில், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 31-ஆம் தேதி சஞ்சய் ராவத்தை கைது செய்தது அமலாக்கத்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்