சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை – மத்திய பிரதேச முதல்வர்

Default Image

சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.200 கோடி கடன் தொகையை வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் போபாலில் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் மற்றும் கடன் வழங்கல் திட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அம்மாநிலத்தில் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1.30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டது.

இதனிடையே, உஜ்ஜைனிலுள்ள இந்தோக் கிராமத்தில் நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கான ரூ.79.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தோக் தடுப்புத் திட்டத்தையும் சவுகான் திறந்து வைத்தார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், நான் இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது அரசாங்கம் மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிப்பதாகும். இந்த திட்டம் இப்போது, பண்ணைகளின் பயனுள்ள நீர்ப்பாசனத்திற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்