அடேங்கப்பா.! ரூ.1,161 கோடியே 74 லட்சம் வருமானத்தை கொடுத்த பணக்கார கடவுள்.!

Default Image
  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
  • இதனால் காணிக்கையாக ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணக்கார கடவுள் என்று அழைக்கப்படும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைவரும் வருடம்தோறும் சென்று அவர்களது வேண்டுதலுக்கு ஏற்ப முடி மற்றும் உண்டியல் காணிக்கையை செலுத்தி வருகிறார்கள். அவ்வப்போது சென்று வரும் போது சிறப்பு வாய்ந்த லண்டு போன்ற பிரசாத வகைகளை வாங்கி வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு 2 கோடியே 78 லட்சத்து 90 ஆயிரத்து 179 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் கடந்தாண்டில் காணிக்கையாக உண்டியல் மூலம் ரூ.1,161 கோடியே 74 லட்சம் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டில் 12 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 815 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும், 1 கோடியே 16 லட்சத்து 61 ஆயிரத்து 625 பக்தர்கள் முடி காணிக்கை செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரூம் வாடகை மூலம் ரூ.83 கோடியே 71 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்