சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி.!

Default Image

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவியில் 7% வரை வட்டி தள்ளுபடி என்றும் கடனுதவி வழங்குவதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவார்கள் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk