நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.79% ஆக அதிகரிப்பு – மத்திய அரசு

Default Image

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை.

நாட்டில் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் 4.21% ஆக இருந்த சில்லறை பணவீக்கம் 2022 ஏப்ரலில் 7.79% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 6.95%-ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம், 0.84% உயர்ந்து, தற்போது 7.79% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பருக்குப் பின் இந்த அளவுக்கு பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்றும் தொடர்ந்து உயர்ந்துவரும் விலைவாசியே, பணவீக்க விகிதம் அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்