47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கிய ராம்நாத் கோவிந்த்.!

இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை காணொலி வாயிலாக விருதுகளை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார்.
ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசியார் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட இவர்களுக்கு இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் காணொலி காட்சி வாயிலாக குடியரசு தலைவர் விருது வழங்கினார். இந்த விழாவில், தமிழகத்தில் சென்னையை சேர்ந்த திலீப் மற்றும் சரஸ்வதி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதினை பெற்றனர்.