#BREAKING: ராஜ்நாத் சிங் லடாக் பயணம் ஒத்திவைப்பு.!

Default Image

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் லடாக் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் சீன இராணுவத்துடன் எல்லையில் ஏற்பட்ட மோதல் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்ய  ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்லவிருந்தார். இந்நிலையில், அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால்,  அவர் மீண்டும் பயணம் செய்யும் தேதி வெளியாகவில்லை.

இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான மோதலுக்குப் பிறகு பாதுகாப்பு அமைச்சரின் லடாக் பயணத்தின் முதல் பயணமாக இது இருந்தது. அவருடன் ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம். நர்வானே செல்லவிருந்தார். இராணுவத் தலைவர் நர்வானே ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் லடாக் சென்று மூத்த இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்