கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் – ராகுல்காந்தி ட்வீட்.
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது, தரையிறங்கும்போது ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது. இவ்விமானத்தில் 2 விமானிகள், 6 விமான பணிப்பெண்கள், 10 கைக்குழந்தைகள் உட்பட 191 பேர் பயணம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை இயக்கிய 2 விமானிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், சில பயணிகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய மீட்டப்புப்படை வீரர்கள் மீட்புப்பணியில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமான விபத்து குறித்து, பலரும் தங்கள் ஆழ்ந்த வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், கோழிக்கோட்டில் விமானம் விபத்துக்குள்ளான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகட்டுவம், காயமடைந்தவர்கள் விரைவாக மீட்க பிரார்த்தனை செய்வதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.
unknown node