டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை..துணை முதலமைச்சர் தகவல்..

Default Image

சீனாவில் உள்ளஉகான் நகரில் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தற்போது 100- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது இந்நிலையில் இந்தியாவிலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதனால் கொரோனா வைரஸ்  பரவாமல் இருக்க பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவேண்டும் என மத்திய ,மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டப்படி இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 இந்த பரபரப்பான சூழலில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் பிரிஜேஷ் படேல் தலைமையில் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் அமித் ஷா மகன் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே டெல்லி பள்ளி கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்