போலீஸ் தடியடிலிருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தி!

போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.

போலீஸ் தடியடியில் இருந்து தொண்டரைக் காப்பாற்றும் பிரியங்கா காந்தியின் வீடியோ, தற்பொழுது வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த ராகுல்காந்தியை போலீசார் வழிமறைத்தனர்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, விதிகளை மீறியதாக அவர்களை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர். இந்நிலையில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உயிரிழந்த அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அவர்களை டெல்லி-நொய்டா சாலையில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்க 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கூறினார்கள். இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர்.

இதற்கு முன், நொய்டா சாலைக்கு வந்த அவர்களை போலீசார் வழிமறைத்தனர். மேலும் அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை கவனித்த பிரியங்கா காந்தி, பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி தொண்டர்களை போலீஸ் தடியடியில் இருந்து காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ பதிவு, சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவிவருகிறது.

unknown node