உத்திர பிரதேசத்துக்கு செல்லும் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி! காரணம் இதுதானா?

Default Image

இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது. இந்நிலையில், உத்திர பிரதேசத்தில்  வயது பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், அப்பெண் உயிரிழந்துள்ளார். இதற்க்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர். இவர்களது வருகையையடுத்து, அம்மாவட்டத்தில் சிஆர்பிசி பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு  விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஹத்ராஸ் மாவட்ட நீதவான் பி லஷ்கர் கூறுகையில், பிரியங்கா காந்தியின் வருகை குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்