ராணுவ எந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் பெரிய முன்னேற்றம்-பிரதமர் நரேந்திர மோடி

Default Image
  • தேசிய போர் நினைவகம் திறப்பு விழா நடைபெற்றது.
  • ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது  என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தேசிய போர் நினைவகம் திறப்பு விழாவிவில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,   இது புதிய இந்தியா – இந்தியா புதிய பாதையில் பயணித்து முன்னேறி வருகிறது . ராணுவ வீரர்களுக்கு 3 புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளது.

வீரர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு ஆரோக்கியமாக இருக்கும் .பெண்களை போர் விமானிகளாக்க வாய்ப்பு வழங்கி உள்ளோம். பெண் வீரர்களுக்கும் ஆண் வீரர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது .

மேக் இன் இந்தியா” திட்டம் மூலம் ராணுவ எந்திரங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம் . பல ஆண்டு கோரிக்கையான தேசிய போர் நினைவகத்தை நாங்கள் தொடங்கி வைத்துள்ளோம்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் இந்திய பாதுகாப்பிற்காக இதுவரை உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்