மகாராஷ்டிராவில்  திரையரங்குகள் திறக்க அனுமதி

Default Image

மகாராஷ்டிராவில்  திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய அரசு தளர்வுகளுடனான ஊரடங்கை அக்டோபர் 31 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  மத்திய  உள்துறை அமைச்சகம்  அறிவித்தது.செப்டம்பர்  மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று முதல் திரையரங்குகள்  திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் :

திரையரங்குகளில்  50% இருக்கை வசதிகளுடன் இயங்கலாம் .ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும்.மாஸ்க் அணிந்த படியே அனைவரும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க  வேண்டும் .திரையரங்கு உள்ளே  நொறுக்குத் தீனி வழங்க தடை விதிக்கப்படுகிறது .ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் கிருமி நாசினி  கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Omar Abdullah - IMF
Baglihar Dam Opened
Pak Lanch pad destroyed by indian army
32 Airports closed
Pak drone in India Borders
Drones intercepted in Jammu