இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.!  

Default Image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டத்தொடர் தொடங்க முடியவில்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு 12 நாட்கள் முன்பாகவே (மார்ச் 23) முடிக்கப்பட்டதால், இரு கூட்டத் தொடர்களுக்கு இடையே 6 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது என்பதால் மழைக்கால கூட்டத்தொடரை விரைவில் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இரு அவைகளையும்  பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எல்லை விவகாரம், பொருளாதார வீழ்ச்சி, உள்ளிட்டவை  குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்