பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை, குடும்பத்திடம் ஒப்படைப்பு-போலிஸ்

Default Image

நேற்று விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட்டர் ரிஷப் பந்த்தின் உடைமைகள் திருடப்படவில்லை என போலிசார் தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில், கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த்தின் பணம் மற்றும் பிற உடைமைகள் திருடப்பட்டதாக வெளிவந்த தகவலை உத்தரகாண்ட் போலிசார் மறுத்துள்ளனர். அந்த செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

பந்த்தின் பிளாட்டினம் செயின், தங்க கைசெயின் மற்றும் 4000 ரூபாய் பணம், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பந்த் அனுமதிக்கப்பட்டு அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என்று போலிசார்  மேலும் கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்