தொடர் கனமழையால் புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை (4-11-2022) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
unknown node