நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை.!

Default Image

நேஷனல் ஹெரல்டு நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தை, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருங்கிய தொடர்புடைய நிறுவனத்திற்கு மாற்றிய போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரிடம் விசாரணையும் நடைபெற்றன.

விசாரணை நடைபெற்ற போது காங்கிரஸார் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தற்போது, நேஷனல் ஹெரல்டு நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்