நாப்கின் மறுசுழற்சி இயந்திரம் – புனே பொறியியல் மாணவரின் கண்டுபிடிப்பு!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
புனேவை சேர்ந்த பொறியியல் மாணவர் பேட்கர் எனும் நாப்கின் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
புனேவில் உள்ள அஜிங்கிய தகியா எனும் பொறியியல் படித்த மாணவர் ஒருவர் பேட்கர் எனும் அரசு இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இது நாப்கின்களை மறுசுழற்சி செய்வதற்கு உதவுகிறது. இதில் உபயோகப்படுத்தப்பட்ட நாப்கின்கள் சுமார் 45 நாட்கள் வரை சேகரிக்கப்பட்டு அதை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இவரது கண்டுபிடிப்பு உதவுகிறது.
மேலும் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட நாப்கின்கள் மூலம் பல வீட்டு அலங்கார பொருட்கள் கூட தயாரிக்கலாம் எனவும் இந்த இயந்திரத்தை தயாரித்த தகியா அவர்கள் கூறியுள்ளார்கள். தற்போது நாப்கின்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதை மறுசுழற்சி செய்யக்கூடிய இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது பலர் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது.