5-வது குழந்தை பிறந்த உடனே மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவன் ..!காரணம் என்ன தெரியுமா ..?

Default Image

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கமீல்.இவர்  கடந்த பதினோரு வருடங்களுக்கு முன் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர்.நான்கு குழந்தைகளும் பெண் குழந்தை.
இந்நிலையில் கமீல் மனைவி ஐந்தாவது முறையாக கர்ப்பம் தரித்தார். இதை எடுத்து பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு கமீல் மனைவி சென்றுள்ளார். ஆனால் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐந்தாவது பெண் குழந்தை எனக்கேட்ட கமீல் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி போனிலே முத்தலாக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் குடும்பத்துடன் சென்று தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கமீல் மனைவி புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
mk stalin TVK VIJAY
Gujarat Titans vs Rajasthan Royals
donald trump Tax
Thirumavalavan VCK
Ghibli Cyber Crime
TN CM MK Stalin - TN BJP Leader Annamalai